ஊழல் புகார்: ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதி !
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ஊழல் புகாரில் சிக்கியிருந்த நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மான்விழி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மான்விழி. இவர் மீது பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே ஊழல் புகார் விசாரணை நிலுவையில் உள்ளதால் பணி ஓய்வு பெறும் நாளில் அவரை 'சஸ்பெண்ட்' செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பொன் கலையரசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணி ஓய்வு பெறுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணி ஓய்வு பெறும் நாளில் நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications