யாருடன் கூட்டணி? பெரம்பலூரில் ஜன.9-ல் கூடுகிறது தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு!!
சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த அணிக்கு போகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் பெரம்பலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக தங்கள் அணிக்கு வர வேண்டும் என்று தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தோ செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி மாநாடு ஆகியவற்றை கூட்டி ஆலோசித்து பின்னர் அறிவிப்போம் என கூறி வருகிறார்.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும்பொதுக்குழு கூட்டம் தலைமைக் கழகம் அறிவிப்பு pic.twitter.com/1DnJYBK9jl
— DMDKParty (@dmdkparty2005) December 30, 2015 இந்த நிலையில் தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு ஜனவரி 9-ந் தேதி பெரம்பலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 09.01.2016 சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள J.K மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப் படவுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தேமுதிக தலைமை நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications