தேமுதிக ஆபீசில் நாளை 'யோகா தினம்'.. விஜயகாந்த் பங்கேற்று யோகாசனம் செய்கிறார்?
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நாளை காலை யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதில் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் 21ம் நாளை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். அதை கொண்டாடும் வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
— DMDKParty (@dmdkparty2005) June 20, 2015 இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதில் டாப் என்னவென்றால், விஜயகாந்த் யோகா செய்வது போன்ற ஒரு படம் அக்கட்சி ஆதரவு, டிவிட்டர் தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை ஆடையில் அமர்க்களமாக, யூத்புல்லாக தெரிகிறார் விஜயகாந்த். அநேகமாக ரமணா திரைப்பட காட்சி அதுவாக இருக்கும் என்று தெரிகிறது. இதை வைத்து பார்த்தால், விஜயகாந்த்தும் நாளை யோகாசன பொசிசன்களை செய்து காட்டி தொண்டர்களை மகிழ்விப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications