கற்சிலை மாதிரி போஸ் கொடுத்த "கேப்டன்".. நொந்துபோன தொண்டர்கள் !
தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜயகாந்த் சிலை போல் அமர்ந்திருந்தது அவரது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர்களை ஏறிட்டும் பார்க்காமல் விஜயகாந்த் சிலைப்போல் அமர்ந்திருந்ததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களை சந்தித்து தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழா மேடையில் விஜயகாந்த் தொண்டர்களின் குடும்பத்துடன் போட்டோர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் விஜயகாந்த்துடன் போட்டோ எடுக்க ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழா மேடையில் விஜயகாந்துக்கு இருபுறமும் 2 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அதில் தொண்டர்கள் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது விஜயகாந்த் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் சிலைப்போல் உட்காந்திருந்தார். அவர்களை விஜயகாந்த் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
யார் போட்டோ எடுக்கிறார்கள் என்று கூட விஜயகாந்த் பார்க்கவில்லை. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த தொண்டர்கள் கட்சி தலைவர் திரும்பிக் கூட பார்க்காமல் சிலை போல் அமர்ந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என நொந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications