தேமுதிக கொடியை உடலில் வரைந்து விஜயகாந்த் வீடு அருகே ரவுண்டடித்த தொண்டர் கைது
சென்னை: தேமுதிக கொடியை உடலில் வரைந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு அருகே மர்மமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த 35 வயது நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். இவரது உடலில் தேமுதிக கொடி வரையப்பட்டிருந்தது. இவர் நேற்று விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டுப் பக்கம் மர்மமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து யாருப்பா நீ என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், அவர் தன்னை தேமுதிக அனுதாபி என்று கூறியு்ள்ளார். பெருங்குடியில் உள்ள அவரது வீட்டை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எனக் கூறி அதிகாரிகள் இடித்துள்ளனராம். இதனால், இந்த தகவலை விஜயகாந்திடம் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக ரமேஷ் விருகம்பாக்கத்துக்கு வந்திருந்தாராம்.
சரி உடலில் எதற்குக் கொடி என்று கேட்டபோது, விஜயகாந்த் கவனத்தை ஈர்க்கத்தான் என்று கூறினாராம். இதையடுத்து மர்மமான முறையில் சுற்றியதற்காக அவரைப் போலீஸார் கைது செய்து வழக்கையும் போட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications