நாமக்கல் தேமுதிக பிரமுகர் வீட்டில் “பெட்ரோல் குண்டு” வீச்சு
நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் வீட்டின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இச்சதிச்செயல் மற்ற கட்சியினருக்கு நடுவில் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
வேலுக்குறிச்சி அருகே பள்ளிப்பட்டில் தேமுதிக மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன் வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் எதிர்கட்சிகளின் சதியா,இல்லை வேண்டாதவர்களின் பழித்தீர்க்கும் படலமா என்று எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கணேசன் காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேளூக்குறிச்சி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications