கருணாநிதிக்கு நினைவேந்தல்.. 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனர்... புதிய நடைபாதை சேதம்
Recommended Video
சென்னை: கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தையொட்டி சென்னை விமான நிலையம் முதல் நந்தனம் வரை உள்ள நடைபாதையில் 4 கி.மீ. தூரத்துக்கு திமுக பேனரை வைத்துள்ளது.
தமிழகத்தில் பேனர் கலாசாரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுக்கப்பட்டது.
அப்போது பேனர்களை வைப்பதில் உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் இன்று கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்திற்காக சென்னை விமான நிலையம் முதல் நந்தனம் வரை 4 கி.மீ தூரத்துக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதைகள் சேதப்படுத்தப்பட்டு கொம்புகள் நடப்பட்டுள்ளன.
Sorry state of affairs.
— Pramod Madhav (@madhavpramod1) August 30, 2018
Location - Guindy, adjacent to Chennai airport.
Banners raised portraying @kalaignar89's legacy. But footpaths damaged, blocked in many areas!!
Why destroy public property and no clue how Chennai Corporation allows such acts!!! @mkstalin @JAnbazhagan!? pic.twitter.com/8WPWMfkA36
இதுபோல் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நடைபாதையை சொந்த நிகழ்ச்சிக்காக சேதப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் பாதசாரிகள் கேட்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை அதிமுகவும் திமுகவும் மதிப்பதில்லை என்பது கண்கூடாக தெரிவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதே போல் திமுக ஏற்கெனவே நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த விவகாரத்தில் அவற்றை சீரமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.