அழகிரியிடம் திட்டு வாங்கியவர்தான் நெல்லை வேட்பாளர்களிலேயே துட்டுக்காரராம்!
திருநெல்வேலி : நெல்லை தொகுதியில் போட்டியிடும் வேடபாளர்களிலேயே திமுகவின் தேவதாச சுந்தரம்தான் பெரிய பணக்காரர்.
அவர்தான் மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளரும் கூட. மற்றவர்களெல்லாம் இவருக்குப் பின்னால்தான்.
இவரை பலருக்கும் யார் என்றே தெரியாது. இருந்தாலும் மிகப் பெரிய பணக்காரரான இவர் வேட்பாளராகி விட்டார்.

யார் இந்த தேவதாச சுந்தரம்
இந்தக் கேள்வியைக் கேட்டது வேறு யாருமல்ல மு.க.அழகிரிதான். மதுரையில் செய்தியாளார்களிடம் அவர் பேசுகையில் இப்படிக் கேட்டார்.

இவருக்கெல்லாம் 3வது இடம்தான்
அத்தோடு நில்லாமல், இவருக்கெல்லாம் 3வது இடம்தான் கிடைக்கும். காசு கொடுத்து டிக்கெட வாங்கி விட்டார் என்றும் திட்டித் தள்ளியிருந்தார்.

ஆனால் பெரும் சொத்துக்காரர்
ஆனால் நெல்லை வேட்பாளர்களிலேயே பெரும் பணக்காரர் இந்த தேவதாச சுந்தரம்தான். அதாவது இவரது சொத்து மதிப்பு ரூ. 18.6 கோடியாகும்.

வயசு 73 ஆச்சு
சுந்தரத்துக்கு வயது 73 ஆகிறது. அரசுத்துறையில் கட்டுமானப் பிரிவில் பொறியாளராக இருந்தவர்.

அசைவது மட்டும் ரூ. 3.14 கோடி
அசையும் சொத்துக்களாக 3 கோடியே 14 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்களாக நிலபுலன், கட்டடம் 15 கோடியே 55 லட்சம் மதிப்பில் இருப்பதாகவும் மொத்தம் 18 கோடியே 69 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளார்.

ஒரு வரி பாக்கியும் கிடையாது
அரசுக்கு எந்த வரிபாக்கியும் இல்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வருமான வரி தாக்கலின்போது ஆண்டுவருமானமாக 69 லட்சத்து 50 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் ரொம்ப தூரத்தில்
மற்ற வேட்பாளர்கள் எல்லாம் இவருக்குப் பின்னால் ரொம்ப தூரத்தில் உள்ளனர் - சொத்து விஷயத்தில்.












Click it and Unblock the Notifications