ஆர்.கே.நகரில் திமுகவிற்கு 38% ஓபிஎஸ் அணிக்கு 30% பேர் ஆதரவு - நக்கீரன் சர்வே
ஆர். கே. நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு வாக்களிப்போம் என்று 38% பேர் கூறியுள்ளனர். ஒபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு 30% பேர் வாக்களிப்பபோம் என்று கூறியுள்ளனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 38% இளைஞர்கள் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 30% பேர் கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று 19% பேரும், பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 1% பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.
தீபாவிற்கு வாக்களிப்போம் என்று 4% பேரும் தேமுதிகவிற்கு வாக்களிப்போம் என்று 2% பேரும் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து களம் காண்கின்றன. இரட்டை இலை முடக்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

நக்கீரன் சர்வே
அதிமுக இரு அணியாக பிரிந்துள்ளதால் திமுகவிற்கே வாய்ப்பு அதிகம் என்று நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள் ஆதரவு திமுக வேட்பாளர்களுக்கே உள்ளது. 38% பேர் மருதுகணேஷ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மதுசூதனன் - டிடிவி தினகரன்
அதே நேரத்தில் மதுசூதனனுக்கு 30% பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். டிடிவி தினகரனுக்கு 19% பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு 2% பேரும், பாஜகவிற்கு 1% பேரும், தீபாவிற்கு 4% பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

5000 வாக்காளர்கள்
5000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று வாக்காளர்கள் கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications