3 மாவட்டச் செயலாளர்களை நீக்கியது திமுக.. ஏ.கே.எஸ். விஜயனும் விடுவிப்பு!
சென்னை: நாகப்பட்டனம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து ஏ.கே.எஸ். விஜயன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய செயலாளராக கெளதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல நாகை வடக்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர்களையும் நீக்கியுள்ளது திமுக. நாகை தெற்கு மாவட்ட செயலாளராக திமுக முக்கியத் தலைவரான விஜயன் இருந்து வந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் களையெடுக்கும் வேலையை திமுக செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜயன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில், நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் விடுவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு என். கெளதமன் நியமிக்கப்படுகிறார்.

நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் பி. கல்யாணம் விடுவிக்கப்பட்டு அவரது இடத்தில் நிவேதா எம். முருகன் நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜாங்கம் விடுவிக்கப்பட்டு பொறுப்பாளராக கழுகுமலை ஏ. சுப்ரமணியன் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
கட்சிப் பணிகள் சரிவர நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் புதிய நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்












Click it and Unblock the Notifications