நீட்: கட்சிகளை ஒருங்கிணைத்து போராட திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைத்து போராட திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைத்து போராட திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நீட் தேர்வால் அரியலுர் மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே காரணம் எனக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று அவர் கூறினார்.
Recommended Video
ஜெயலலிதாவின் அரசு கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அனிதாவின் குடும்பத்தினர் விரைவில் அரசின் உதவிகளை ஏற்பார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.