காவிரி: திமுக தலைமையில் ஏப். 1ல் அனைத்து கட்சி கூட்டம்.. அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்த திமுக அவசர செயற்குழு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திமுக அறிவித்தபடி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூட்ரினோ, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்துவது மற்றும்,காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஏப்ரல் 1ல் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications