அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக மாஜி கவுன்சிலர் சிறையில் அடைப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக மாஜி கவுன்சிலர் சிறையில் அடைப்பு-வீடியோ
பெரம்பலூர்: அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் அங்கு பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

அந்த அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், சத்யாவை கடுமையாக தாக்கினார். ஏதோ பேசிக் கொண்டே அவர் சத்யாவை தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.


இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. பெண் என்றும் பாராமல் அவர் மீது செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கும் காட்சிகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது. மேலும் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications