செயற்குழுவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய ஸ்டாலின்.. கலக்கத்தில் அழகிரி
திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். இது அழகிரி தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது.
முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பறந்த தகவல்
நான்கு நாட்களுக்கு முன் இப்படி கூட்டம் நடக்க போகிறது என்று அறிவிப்பு வந்த போதே இதுகுறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதேபோல் கண்டிப்பாக எல்லா நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் தீர்க்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மிக முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது என்றும் தகவல் பறந்தது.

பெரிய ஏற்பாடு
அதற்கு ஏற்றபடி தற்போது அண்ணா அறிவாலயத்தில் பெரிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை, திமுக நடத்திய செயற்குழு கூட்டத்தில் மிக முக்கியமான கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. உட்பக்கம் மட்டுமில்லாமல் வெளியேவும் பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பீக்கர், பேனர் கட்டப்பட்டு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

அழகிரி குறித்து
இந்த கூட்டத்தில் அழகிரி குறித்து சில தலைவர்கள் மட்டும் பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவரை குறித்து பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரை குறித்து க.அன்பழகன் தவிர வேறு யாரும் பேசவில்லை. ஆம், இந்த கூட்டத்தில் அழகிரி பிரச்சனையை பெரிய அளவில் திமுக நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை.

அழகிரி கலக்கம்
அழகிரி பிரச்சனையை அமைதிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளார். இது அழகிரி தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சிலராவது தனக்கு உதவுவார்கள், தன்னை பற்றி நேர்மறையாக கூட்டத்தில் பேசுவார்கள் என்று நினைத்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.












Click it and Unblock the Notifications