மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு....தமிழக அரசுக்கு திமுக பொதுக்குழு கண்டனம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சென்னையில் கூட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 23 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் யார் யார் கூட்டு சேரப் போகிறார்கள் என்ற கேள்விதான் மக்கள் முன்பு இப்போது அதிகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.
குறிப்பாக பாஜக, தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பின்னணியில் இன்று சென்னையில் திமுக தனது பொதுக்குழுவைக் கூட்டியது.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய பின்னர் 9 மாதம் கழித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. எனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் பொதுக்குழுக் கூட்டத்தில் 23 முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
அவற்றில் முக்கியமான சில...
- இலங்கை படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும்.
- சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைக்கும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.












Click it and Unblock the Notifications