குடும்பத் தகராறு... திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியை சரமாரியாகத் தாக்கிய சகோதரர்கள்!
சென்னை: குடும்பத் தகராறு காரணமாக திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமியை அவரது சகோதரர்கள் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த எம்எல்ஏ தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார் திமுகவை சேர்ந்த கே.பி.பி. சாமி. அவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் ஒருவரான சங்கர் சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொருவர் சொக்கலிங்கம். இவர்கள் இருவரும் எம்எல்ஏ கே.பி.பி. சாமி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பதிலுக்கு கே.பி.பி. சாமியும் தம்பிகள் இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த கே.பி.பி. சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது தம்பிகள் இருவருக்கும் கே.பி.பி. சாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் , வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எம்எல்ஏ மற்றும் அவரது தம்பிகளுக்கிடையே நடைபெற்ற இந்த கைகலப்பால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications