கருப்பசாமி பாண்டியன் மீது வழக்கு... ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து
தென்காசி: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கு காரணமாக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட திமுக நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்காசியில் வரும் 30ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி நேரடி கலந்தாய்வு மற்றும் கடையநல்லூர் பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட இளைஞரணி சார்பில் குற்றாலத்தில் வரும் 30ம் தேதி காலையில் கட்சியின் இளைஞரணி செயல்பாடு குறித்தும், இளைஞரணியின் பணிகள் குறித்தும் அமைப்பாளர்களுடன் நேரடி கலந்தாய்வு மேற்கொள்ள கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் வரும் 30ம் தேதி வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அன்று இரவு கடையநல்லூரில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக திமுக வட்டாரம் தரப்பில்கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்ற தகவல்களை திமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கட்சித் தலைமை நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளது. இந்நிலையில் அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளதால் அவர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையுள்ளதால் இந்த நிகழ்ச்சிகள் மற்றொரு நாளில் நடக்கும் என்றனர்.












Click it and Unblock the Notifications