கலப்படம் இல்லைன்னா தற்கொலை செஞ்சிப்பேன்னு சொன்னீங்களே... ராஜேந்திர பாலாஜியை வாரிய ஸ்டாலின்
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பினார்.
சென்னை: தனியார் பாலில் கலப்படம் இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து திமுகவினர் சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்வதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார்.
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம் சாட்டினார். இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் குண்டைத் தூக்கிப்போட்டார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு தனியார் பால் நிறுவனங்களும் பால் முகவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு பாலில் எந்தக் கலப்படமும் செய்யப்படவில்லை என மறுப்புத் தெரிவித்தனர். எதற்கும் அசராத அமைச்சர், தனியல் பாலில் கலப்படம் செய்யப்படுவது நிரூபிக்க படாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன், தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் கூறினார்.

பதவி விலக வேண்டும்
இந்நிலையில் தனியார் பாலில் ரசாயனங்கள் ஏதும் கலக்கப்படவில்லை என உணவு கட்டுப்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தூக்கில் தொங்குவேன்
இந்த பிரச்சனையை சட்டசபையில் திமுக இன்று எழுப்பியது. இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாலில் கலப்படம் நிரூபிக்கப்படாவிட்டால் தூக்கில் தொங்குவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார் என்று தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கூறியிருந்தார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். பாலில் கலப்படம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனக்கு தகவல் வந்தது
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார். தானாக எதையும் கூறவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications