சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற திமுக கோரிக்கை
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செயல்படுவார் அதனால் அவரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் செயல்படுவார் எனவும் அதனால் அவரை மாற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுகவின் சசிகலா அணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆதரவாக செயல்படுவார்.

ஜல்லிகட்டு தடைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய அறப்போராட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில், அதிமுகவின் தலைவர்கள் உத்தரவை கேட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் ஜார்ஜ்.
கூவத்தூர் ரிசார்டில் வலுகட்டாயமாக அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருந்த சசிகலா தரப்பினருக்கு உடந்தையாக ஜார்ஜ் இருந்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற திமுக கோரிக்கை https://t.co/YK0JK2pyLB pic.twitter.com/l5rZXpN8EK
— Oneindia Tamil (@thatsTamil) March 11, 2017
ஓ பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவர் தொலைபேசியில் அழைத்தால் கூட பேசாதவர் ஜார்ஜ். இந்நிலையில் ஆர் கே நகர் இடைத்தேர்தல், ஜனநாயக முறைப்படி அமைதியாக நடைபெற ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை செயலாளருக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications