இலை உதிர்ந்து.. சூரியன் உதிக்கும்... கை துணை நிற்கும் - குஷ்பு பேச்சு
நாகர்கோவில்: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்த முறை வெற்றி பெற்று சூரியன் உதிக்கும். அதற்கு கை என்றும் துணையாக நிற்கும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் மாற்றம் தேவை மாற்றத்தை நோக்கி என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், "இந்த தேர்தலில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏற்றபடி பணத்தை செலவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் அதை தடுக்க வேண்டிய வேலைகளில் காங்கிரஸ் முழு நேரமும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த தேர்தலில் இலை உதிரும். சூரியன் உதிக்கும். அதற்குக் கை உதவும்.
காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை குலாம் நபி ஆசாத் முடிவு செய்வார். என்னை தேர்தலில் நிற்கச் சொல்லி மேலிடம் சொன்னால் நிற்பேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications