போராட்டத்தில் பங்கேற்ற திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர் அணி நிர்வாகியால் சலசலப்பு
Recommended Video

கரூர்: கரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காவிரி பிரச்சினைக்காக திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தன. கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கமேடு அண்ணா சிலை அருகே வந்திருந்தார். அங்கு ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்றவற்றை திமுகவினர் நடத்தினர்.

அப்போது, தனது இடுப்பில் இளைஞர் அணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் கிள்ளியதாக ஜெயமணி புகார் தெரிவித்துள்ளார். தனக்கு பின்னால் வந்த பிரபாகரன், திடீரென இடுப்பில் கை வைத்ததாகவும் இதனால் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
நகர செயலாளர் கவனத்திற்கு இதை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என்றும் ஜெயமணி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திமுகவினருடன் ஜெயமணியும் இருந்தார். மாலையில் போலீசார் விடுவித்த போதும், மண்டபம் எதிரில் உட்கார்ந்து, நியாயம் கேட்டு அவர் தர்ணா நடத்தினார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications