திமுகவில் "குமரி" தொகுதியை குறிவைக்கும் பெண்கள்.. கோதாவில் சற்குணபாண்டியன் மருமகள்!
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய திமுகவில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி தொகுதிக்கு நேர்காணல் நடைபெற்றது.
அத்தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருப்பவர் திமுகவின் ஹெலன் டேவிட்சன். ஆனால் ஹெலன் மீது கடுமையாக அதிருப்தி கட்சிக்குள் இருக்கிறதாம்.
இதனால் அவருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது என்பதால் மகளிர் அணியைச் சேர்ந்த பலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். நேர்காணலின் போது கன்னியாகுமரி தொகுதிக்கு இத்தனை பெண்கள் போட்டியிடுகிறார்களே? என்று திமுக தலைவர்களே ஆச்சரியப்பட்டு போனார்களம்.
அதுவும் கட்சி தொடர்பான கேள்விகளுக்கு விரிவாகவும் விரைவாகவும் அந்த பெண்கள் பதிலளித்து அசத்தியும் உள்ளனர். இதனிடையே இந்த தொகுதியை எப்படியாவது தமது மருமகள் ஷியாமளா முத்துச்சோழனுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவது என லாபியில் தீவிரமாக இருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சற்குண பாண்டியன்!