சரத்குமாருக்கு மாரடைப்பு இல்லை.... நலமுடன் இருக்கிறார்- ராதிகா விளக்கம்
சென்னை: சரத்குமாருக்கு மாரடைப்பு என்பது தவறான தகவல்; அவரது உடல்நிலை குறித்து வெளியான தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகரும் சமவத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இன்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சரத்குமாருக்கு மாரடைப்பு இல்லை என்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவரது மனைவி நடிகை ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.
Do not believe the false news that is spreading. Sarath is fine! Just down with food poisoning and a muscle spasm.
— Radikaa Sarathkumar (@realradikaa) June 23, 2016
இது குறித்து ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "சரத்குமார் பற்றி பரவிவரும் தவறான செய்திகளை நம்பாதீர். சரத்குமார் நலமுடன் இருக்கிறார். அவருக்கு, உணவு ஒவ்வாமை (food poisoning) மற்றும் தசை பிடிப்பு தான் ஏற்பட்டது' என்று அவர் தெரிவித்துள்ளார்.