சூடு, சுரணை இருந்தால் ஓட்டுக்கு பணம் தராதீர்: பேனர் வைத்த கடலூர் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கடலூர் மக்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பேனரில் கூறியிருப்பதாவது,
எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல. சூடு, சுரணை உள்ளவர்கள் ஓட்டுக்கு பணம் தராதீர். கடலூர் கிராம பொதுமக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications