குமரி - மதுரை, மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை மின் ரயில் பாதைக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா
குமரி- மதுரை மற்றும் மணியாச்சி- தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதைக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.
கன்னியாகுமரி: ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் நாகர்கோவில் - மதுரை & மணியாச்சி-தூத்துக்குடி இடையே இரட்டை மின் ரயில் பாதை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை,செவ்வாய்க்கிழமை (ஜன. 23) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை மின் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். இதில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன்கொகைன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், இவ்விழாவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 2 மற்றும் 3-இல் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) தொடக்க விழா, ரயில் நிலையம் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதன் தொடக்க விழா ஆகியனவும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ரயில்வே துறையினர் செய்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications