விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்:சட்டசபையில் தி.மு.க, காங். வெளிநடப்பு- சி.பி.எம். வெளியேற்றம்!
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து தி.மு.க, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் நாமக்கல் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஜாதி மாறி காதலித்ததால்தான் ஜாதிய வெறியர்களாள் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார் என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின.

பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தை அதிர வைத்த இந்த தற்கொலை வழக்கையும் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று இந்த விவகாரம் எதிரொலித்தது. விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயர் போலீஸ் அதிகாரிகள்தான் காரணம் என்பதால் இதுபற்றி சபையில் விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைக் கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க.வின் துரைமுருகன், விஷ்ணுபிரியா வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் உண்மைகள் வெளிவராது; சி.பி.ஐ. விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சி.பி.எம். எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
இதேபோல் விஷ்ணுபிரியா விவகாரத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்களை சடசபையில் இருந்து சபை காவலர்கள் வெளியேற்றினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications