துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்
நாகை: துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி வெல்கேர் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 13ம் தேதி தோப்புத்துறை ஹத்தீப் தெருவில் உள்ள அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை ஜமாஅத் மன்றத் தலைவர் கே.எம்.கே.ஐ. நவாஸ்தீன் தலைமையேற்று நடத்திட சங்கத்தின் தாயகப் பிரதிநிதி எம். நஜ்முதீன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். முகாமினை வெல்கேர் மருத்துவமனை நிர்வாகத் தலைவர் எம். சுல்தானுல் ஆரிபீன் துவங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஜே.பி. ஜமால் மெய்தீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேதாரண்யம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அக்பர் அலி முன்னிலை படுத்தி நடத்தி கொடுத்தார்.

முகாமில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசுகளை துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் எம்.எம். ஷர்புதீன், தாயகப் பிரதிநிதிகள் ஏ. நஜீப், எஸ்.ஏ.எஸ். ஆரிபீன், அன்னை பாத்திமா அரபிக் கல்லூரி நிர்வாகிகள் கமாலுதீன், எம். ஜெய்னுதீன், சி. பஷீர் அகமது சங்கத்தின் நிர்வாகிகள் எம்.ஜே. அவுலியா முகம்மத், ஹெச்.கே. நாசர் ஆகியோர் வழங்கினர்.

சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எம்.எஸ். முகம்மது இஸ்மாயில், ஹெச். முகம்மது மைதீன், எஸ். ஜபருல்லா கான், ஜே.பி. முஜீப் ரஹ்மான், ஏ. அவுலியா முகம்மது, எஸ். ஹாஜா நஜ்முதீன், எம். ஷாகுல் ஹமீது, பி.எஸ்.எம். ஷேக் அலாவுதீன், ஏ. அகமது அனஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications