தமிழகத்தில் 22ந் தேதியுடம் பிரசாரம் ஓய்கிறது: எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப கூடாது - பிரவீண்குமார்
சென்னை: தமிழகத்தில் 22-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்ரு பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:
இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 21 கோடியே 52 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1,94000 விதிமீறல்
17 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 94 ஆயிரம் விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளன.
சிதம்பரம் மீதான புகார்
வாக்காளர்களுக்கு கை கடிகாரம் கொடுப்பதாக ப.சிதம்பரம் மீது நரேந்திரமோடி கூறிய புகார் பற்றி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கடும் நடவடிக்கை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் சமூக வலைதளங்கள், கைப்பேசி குறுந்தகவல்கள், உள்பட எந்த வடிவத்திலும் பிரசாரம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ வீரர்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் நாளை கூடுதல் படையினர் வர உள்ளனர்.
பொது விடுமுறை
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications