தமிழகத்தில் 22ந் தேதியுடம் பிரசாரம் ஓய்கிறது: எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப கூடாது - பிரவீண்குமார்
சென்னை: தமிழகத்தில் 22-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்ரு பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:
இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 21 கோடியே 52 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1,94000 விதிமீறல்
17 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 94 ஆயிரம் விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளன.
சிதம்பரம் மீதான புகார்
வாக்காளர்களுக்கு கை கடிகாரம் கொடுப்பதாக ப.சிதம்பரம் மீது நரேந்திரமோடி கூறிய புகார் பற்றி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கடும் நடவடிக்கை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் சமூக வலைதளங்கள், கைப்பேசி குறுந்தகவல்கள், உள்பட எந்த வடிவத்திலும் பிரசாரம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ வீரர்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் நாளை கூடுதல் படையினர் வர உள்ளனர்.
பொது விடுமுறை
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications