பணத்தால் விளையாடும் அதிமுக... வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்- திருமாவளவன் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான நிலையிலும் ஆளும் கட்சி பணப்பட்டுவாடா செய்வதாகவும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அதிகாரிகள் மூலம் இவை நடக்கிறது.

EC supports ADMK in money for vote -Tirumavalavan

தேர்தல் விதிமுறைகளால் இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றாலும், சட்டம் ஒழுங்கை கையில் வைத்துக்கொண்டு, போலீசை கையில் வைத்துக்கொண்டு எல்லா விதிமீறல்களையும், அத்துமீறல்களையும் ஆளும் கட்சியினர் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர்கள் செய்தும் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் வெறும் தேர்தல் நடத்துகிற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப்போல இயங்குவது வேதனை அளிக்கிறது. அதற்கு எந்த சட்டப்பூர்வமான அதிகாரமும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய 5 கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+