சசிக்காக எடப்பாடி பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதில்? தினகரன் அதிரடியால் பதட்டத்தில் பழனிச்சாமி!
சசிகலாவுக்காக தமது பெயரில் தேர்தல் ஆணையத்துக்கு பதிலனுக்க டிடிவி தினகரன் எடுத்துள்ள முடிவால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போயுள்ளாராம்.
சென்னை: தேர்தல் ஆணையத்தில் சசிகலாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் பதில் மனுவைத் தாக்கல் செய்யலாம் என தினகரன் திட்டமிட்டுள்ளாராம். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தம்முடைய பதவிக்கு தினகரன் வேட்டு வைக்கப் போகிறாரோ என பீதியடைந்து போயுள்ளாராம்.
சசிகலா சிறைக்குப் போனது போதும்... அதிமுக கட்சியும் ஆட்சியும் தினகரன் வசமாகிக் கொண்டே போகிறது. அவர் முன்னெடுக்கும் வியூகங்கள் எல்லாமே எல்லோரையுமே பீதிக்குள்ளாக்குகிறது.

தேர்தல் ஆணையம் கறார்
தேர்தல் ஆணையம் சசிகலாவிடம் பொதுச்செயலர் நியமனம் குறித்து பதில் கேட்டால் தமது பெயரில் பதிலைக் கொடுத்தார் தினகரன். இது சசிகலாவுக்கு சிக்கலைக் கொடுக்க அவர்தான் பதிலைக் கொடுக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம்.

வம்படியாக தினகரன்
ஆனாலும் தினகரன் சும்மா இருக்கவில்லை. இப்போதும் சசிகலாவுக்கு பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கை ஒன்றை கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

திகிலில் எடப்பாடி
சசிகலாவே பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் திட்டமிட்டே தேர்தல் ஆணையத்தை வெறுப்பேற்றும் வகையில் தினகரன் செயல்படுகிறாரே என அதிர்ந்து போயுள்ளனர் அதிமுக நிர்வாகிகள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தினகரனின் இந்த நடவடிக்கையால் பதவி பறிபோகுமோ என திகிலடித்து போயுள்ளாராம்.

சசி சந்திப்புக்கு பின்...
இதனால் தினகரனிடம் மூத்த அமைச்சர்கள் ஒருவரது பெயரில் அறிக்கையை கொடுக்கலாமே என யோசனை தெரிவித்துள்ளாராம் எடப்பாடியார். இதை கேட்டுக் கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்க போகிறேன் பின்னர் முடிவெடுக்கலாம் என அசால்ட்டாக சொல்லிவிட்டாராம்.











Click it and Unblock the Notifications