For Quick Alerts
For Daily Alerts
Just In
"சிங்கத்தின்" பெயரை சிங்கக்குட்டிக்கு வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி
வண்டலூர் பூங்காவில் பிறந்து 6 மாதமே ஆன சிங்கக் குட்டிக்கு ஜெயா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார்.
Recommended Video
வண்டலூரில் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் வைத்தார் முதல்வர் பழனிச்சாமி- வீடியோ
சென்னை: வண்டலூர் பூங்காவில் பிறந்து 6 மாதமே ஆன சிங்கக் குட்டிக்கு ஜெயா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார்.
சென்னை வண்டலூரில் உள்ளது அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 193 வகையான விலங்குகள் உள்ளன. மொத்தம் 2000-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
இங்கு புலிகள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இன்று திறக்கப்பட்டது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அப்போது அவர் பிறந்து 6 மாதமே ஆன சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார்.
இந்த சிங்கக் குட்டி நிலா என்ற பெண் சிங்கத்துக்கும் சிவா என்ற ஆண் சிங்கத்துக்கும் பிறந்ததாகும். இதையடுத்து முதல்வர் பேசுகையில் பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து காண்டாமிருகம் விரைவில் வண்டலூருக்கு வரவுள்ளது என்றார் முதல்வர்.
Comments
English summary
Edappadi Palanisamy names Jaya for 6 months Lion's cub which was born to Nila- Siva couple.