For Daily Alerts
Just In
சென்னையில் நடப்பது முதலீட்டாளர் மாநாடு அல்ல... ஜெ. புகழ்பாடும் மாநாடு: இளங்கோவன்
சென்னை: சென்னையில் நடப்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல, ஜெயலலிதாவின் புகழ் பாடும் மாநாடு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், "தொழில் வாய்ப்புகளை விவரிக்கும் எந்த விஷயமும் மாநாட்டில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே 'ரெக்கார்ட் டான்ஸ்' தான் நடைபெறுகின்றன. சென்னையில் நடப்பது உலக முதலீட்டாளர் மாநாடு அல்ல; ஜெயலலிதா புகழ்பாடும் மாநாடு" என்றார்.
மேலும், ‘அமைச்சர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்காவிட்டாலே முதலீடுகள் பெருகும்' என இளங்கோவன் தெரிவித்தார்.
Comments
evks elangovan congress global investors meet chennai jayalalitha ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை ஜெயலலிதா
English summary
The Tamilnadu congress committee president EVKS Elangovan has criticized the global investors meet that it is Jayalalithaa's praising conference.
Story first published: Thursday, September 10, 2015, 8:38 [IST]