திருநாவுக்கரசர், சிதம்பரத்துக்கு நோ.. குஷ்புவுக்கு ஓ.கே.. சோனியாவுக்கு கடிதம் எழுதினாரா இளங்கோவன்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக காங்கிரஸ் கமிட்டியின், புதிய தலைவர் யார் தலைவர் என்பதை விரைவில் சோனியா காந்தி அறிவிப்பார் என்று, நிருபர்களிடம் பேசிய தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்கள் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

போட்டியில் முக்கிய புள்ளிகள்

போட்டியில் முக்கிய புள்ளிகள்

ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் தலைவர் பதவி ரேசில் உள்ளனர்.

இருவருக்கு பிரகாச வாய்ப்பு

இருவருக்கு பிரகாச வாய்ப்பு

திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இளங்கோவன் கடிதம்

இளங்கோவன் கடிதம்

எனவே, இந்த இரு தலைவர்கள் பற்றியும் புகார் செய்து சோனியா காந்திக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியானது. குஷ்புவை தலைவராக்க வேண்டும் என்றும், அவரே அனைத்து தலைவர்களிடமும் இணக்கமாக இருக்க கூடியவர் என்றும் அந்த கடிதத்தில் இளங்கோவன் கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சோனியா கையில் முடிவு

சோனியா கையில் முடிவு

இந்த தகவலை, இன்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுத்துள்ளார். ஆனால் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது: புதிய தலைவர் யார் தலைவர் என்பதை விரைவில் சோனியா காந்தி அறிவிப்பார்.

வதந்தி

வதந்தி

புதிய தலைவராக திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரத்தை நியமிக்க கூடாது என புகார் தெரிவித்து நான் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியாக வதந்தி பரவுகிறது. சோனியா காந்திக்கு நான் உட்கட்சி நிலவரம் குறித்து கடிதம் எழுதியது உண்மைதான். அதில் என்ன எழுதினேன் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அதுகுறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

மவுனம் பேசியதே..

மவுனம் பேசியதே..

புதிய தலைவரை நியமிக்கும் வரை ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசமாட்டேன், மவுன விரதம் இருப்பேன் என்று கூறிய அவர் திருச்சியில் மவுனம் கலைத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+