மோடிக்கும், தென் சென்னைக்கும் தேர்தல் தொடர்பு!
டெல்லி: மோடி போட்டியிடும் வாரணாசிக்கும், தென் சென்னைக்கும் தேர்தல்ரீதியாக தொடர்பு இருப்பது தெரியுமா, இல்லையென்றால் இந்த விவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் போட்டியிட்டார். அங்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய்ராய், பகுஜன் சமாஜ் சார்பில் விஜய் ஜெய்ஸ்வால், சமாஜ்வாதி சார்பில் கைலேஷ் உள்பட 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மே 12ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

தென் சென்னை தொகுதியை பொறுத்தளவில், ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு பாஜக சார்பில் இல.கணேசன், திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் ஜெயவரதன், காங்கிரஸ் சார்பில் ரமணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாலாஜி என 42 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இப்போது தெரிந்திருக்குமே இந்த 42தான் வாரணாசிக்கும், தென்னை சென்னைக்கும் உள்ள தொடர்பு என்று. ஆம்.. வாரணாசியிலும், தென் சென்னையும்தான் இத்தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் களம் கண்டனர். 2004ல் 35 வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். வாரணாசியிலும், தென் சென்னையும்தான் இத்தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தின் ராய்ப்பூர் தொகுதியில் 36 வேட்பாளர்களும், ராகுல்காந்தி போட்டியிடும் அமேதியில் 31 வேட்பாளர்களும் அதிகபட்சமாக போட்டியிலுள்ளனர்.












Click it and Unblock the Notifications