ஆர்கே நகர் தேர்தல் ரத்தா?: தலைமை தேர்தல் ஆணையருடன் ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா ஆலோசனை
விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி சோதனை நடத்தியது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி, விக்ரம் பத்ரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
டெல்லி : ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி,. சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆர்கே.நகரில் 89 கோடி ரூபாய் வரை பண வரிவர்த்தனை செய்ததற்கான ஆதாங்கள் சிக்கியுள்ளன.

இதேபோல் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணமும் அதில் அமைச்சர்கள் பணத்தை பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து உள்ளிட்டவை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் தலைமை தேர்தல் ஆணையருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications