Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு - அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு-அரக்கோணம் பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் (இன்று) 24, 25, 26, 28 மற்றும் 29-ந் தேதிகளில் (5 நாட்களுக்கு) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Electric train service time will be changed due to maintenance work

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.50 மணிக்கு திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வ.எண்:66042), செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (66042), திருமால்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் இயக்கப்படும். மேலும் அரக்கோணம்- சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மகளிர் சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+