வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்ற அதிமுக அரசு திட்டம்: ராமதாஸ் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Elite liqour shops: Ramadoss slams ADMK government
சென்னை: நவீன மதுக்கடைகள் என்ற பெயரில் எலைட் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மது அரக்கன் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மதுவை வெள்ளமாக பாயவிடும் புதிய திட்டத்தை மிகவும் ரகசியமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் நவீன மதுக்கடைகளை திறப்பது தமிழக அரசின் புதிய திட்டமாகும்.

இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை எழும்பூரில் உள்ள அல்சா மால் என்ற தனியார் வணிக வளாகத்தில் நவீன ஆடம்பர மதுக்கடை சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற தனியார் வணிக வளாகத்திலும், அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, வேளச்சேரி, வடபழனி, கிழக்குக் கடற்கரை சாலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆடம்பர மதுக்கடைகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப்பட உள்ளன.

அடுத்த மூன்றாண்டுகளில் சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 200 ஆடம்பர மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் முதல்கட்டமாக வரும் மார்ச் மாதத்திற்குள் 53 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட மது வகைகள் மட்டுமே விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்ததுமே பணக்காரர்களின் பயன்பாட்டிற்காக எலைட் மதுக்கடைகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 200 மதுக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டது.

இவ்வகை மதுக்கடைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததாலும், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததாலும் எலைட் கடைகளை திறக்கும் திட்டத்தை கடந்த ஆண்டில் தமிழக அரசு கைவிட்டது.

தற்போது எலைட் மதுக்கடைகள் திட்டத்தை வேறு பெயரில் செயல்படுத்த தமிழக அரசு முயல்கிறது. மதுவால் சாலை விபத்து முதல் சமூக அமைதி சீர்குலைவது வரை அனைத்து சீரழிவுகளும் ஏற்பட்டு வரும் நிலையில் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் கூடும் வணிக வளாகங்களில் மதுக்கடைகளைத் திறப்பது பல்வேறு தீமைகளுக்கு வழிவகுக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி விடுதலை நாளையொட்டியும், அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டியும் தமிழகம் முழுவதும் நடந்த கிராமசபைக் கூட்டங்களின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய தீர்மானங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.

அதை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டிய தமிழக அரசு, புதிய மதுக்கடைகளை திறப்பது சரியல்ல. எனவே, நவீன மதுக்கடைகள் என்ற பெயரில் எலைட் மதுக்கடைகளை திறந்து வணிக வளாகங்களை மது வளாகங்களாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+