For Daily Alerts
Just In
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 6வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
Recommended Video
ராஜீவ் காந்தி மருத்துவமனை 6-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை- வீடியோ
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின், ஆறாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவரான சேத்தன் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேத்தன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட சேத்தன்குமார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
An engineering collage student from Odisha committed suicide by jumping from 6th floor at Chennai Rajiv Gandhi government hospital.