ஜெ. மரணம் பற்றி விசாரணை கமிஷன்.. அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று இன்று திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 70 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை முதல்வர் பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் மருத்துவமனை, ஜெயலலிதாவிற்குச் சிறப்பான சிகிச்சை அளித்ததும் வெளியே வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெயலலிதாவிற்கு மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, அவரது மரணம் குறித்து பேசப்படும் பல்வேறு ஊகங்களுக்கு விசாரணை ஆணையத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications