கேரள முதல்வரை மக்களுக்கு அம்பலப்படுத்தவே ஆதாரங்களை வெளியிட்டேன்.. சரிதா நாயர்
கோவை: கேரள மக்கள், தங்களது முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரி்ந்து கொள்ள வேண்டும். அவரது யோக்கியதை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிரான ஆதராங்களை நான் வெளியிட்டேன் என்று கூறியுள்ளார் சரிதா நாயர்.
சூரியத் தகடு மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயரால் கேரள அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டுள்ளது. இதில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார் முதல்வர் உம்மன் சாண்டி.

இவரைப் போல நியாயவான் உண்டா என்று அத்தனை பேரும் பேசி வந்த நிலையில் அவரது இமேஜை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருக்கிறது சரிதா நாயரின் வாக்குமூலங்களும், அவரது ஆதாரங்களும்.
கோவை வடவள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் காற்றாலை அமைத்துத்தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சரிதா நாயர் ஆஜாரானர். இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி ஒத்திவைக்க நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரிதா நாயர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை கொச்சின் சோலார் மோசடி தொடர்பான நீதி விசாரணை ஆணையத்திடம் கடந்த வாரம் ஒப்படைத்துவிட்டேன்.
என்னுடைய ஆதாரங்கள் பலமாக உள்ளன. நீதி விசாரணை ஆணையத்தில் முறையான விசாரனை நடைபெற்றாலே முதல்வர் பதவியில் இருந்து உம்மண் சாண்டி விலகுவது.
எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்துகொண்டு உள்ளது. ஆனால் எனக்குப் பாதுகாப்பு கேட்கப்போவதில்லை. கேரள காவல்துறையினரின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தூண்டுதலில் பேரில் உம்மன்சாண்டி மீது நான் புகார் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உம்மன்சாண்டி குறித்த தகவலை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று என்னை நேரில் தொடர்பு கொண்டு வற்புறுத்துகின்றனர். ஆனால் கேரள மக்களுக்கு தங்களது முதல்வர் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வேண்டும். அதற்காகவே ஆதராங்களை வெளியிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் சரிதா நாயர்.
சூரியத் தகடு விவகாரத்தில் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாதன் முகம்மது ஆகியோரின் உதவியாளருக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் சில நாட்களுக்கு முன்பு விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications