சன் குழுமத்தை முடக்குவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: எப்.எம். ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதி மறுத்தது அரசியல் சட்ட விரோதம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் கூறியுள்ளதாவது: சன் குழுமத்தை முடக்க முயலும் நடவடிக்கையை ஏற்க முடியாது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் அரசின் நடவடிக்கையை ஏற்க மாட்டார்கள். 23 ஆண்டுகளாக சன் குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சன் குழுமம்மீது தேசவிரோத குற்றச்சாட்டு எதுவும் கிடையாது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சன் குழுமம் செயல்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. சன் குழுமம் மீதான நடவடிக்கை அப்பட்டமான பழிவாங்கும் செயல். கருத்து சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதேபோல, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications