இனி நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம்– உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக இருக்கும் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த மாதம் 2 ஆம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலைப் பொறியாளர், இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் போன்ற பணியிடங் களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

நான் இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். எனது வயது வரம்பை தளர்த்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது,.
உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் இந்த மனுவை விசாரித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்தப் பணியிடமாக இருந் தாலும் நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் நடத்தப் பட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 2 ஆம் தேதி நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசுப் போக்குவரத் துக் கழகம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
ஏற்கெனவே தேர்வு செய்யப்பட் டவர்களின் நியமனத்தை ரத்து செய்யக் கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தற்போது பணி நியமனத்துக்கான தேர்வு நடந்தாலும், நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் கட்டாயம்.
நவம்பர் 2 இல் வெளியிட்ட விளம்பரத்தில் உள்ளபடி பணிநியமனம் செய்யும்போது எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை, ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவுடன் சேர்த்து தமிழக போக்குவரத்துத் துறை செயலருக்கு அனுப்ப வேண்டும்.
அவர், அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனத்தில் எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications