Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்தியாளரை தாக்கிய வழக்கு.. விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு

விமானநிலையத்தில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமானநிலையத்தில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த நவம்பர் 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் பாலுவை விஜயகாந்த் மோசமாக திட்டிவிட்டார்.

Exemption for Vijayakanth from appearing in the court in journalist attack case

மேலும் அவரது கட்சியினர் செய்தியாளரை கீழே பிடித்து தள்ளிவிட்டனர். இது பற்றி சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் விஜயகாந்த் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இதனால் விஜயகாந்திற்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் பிப்.13ல் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பு மனுதாக்கல் செய்து இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செய்தியாளரை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் விஜயகாந்திற்கு விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+