For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்தியாளரை தாக்கிய வழக்கு.. விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு

விமானநிலையத்தில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: விமானநிலையத்தில் செய்தியாளரை தாக்கிய வழக்கில் விஜயகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த நவம்பர் 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது செய்தியாளர் பாலுவை விஜயகாந்த் மோசமாக திட்டிவிட்டார்.

Exemption for Vijayakanth from appearing in the court in journalist attack case

மேலும் அவரது கட்சியினர் செய்தியாளரை கீழே பிடித்து தள்ளிவிட்டனர். இது பற்றி சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் விஜயகாந்த் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இதனால் விஜயகாந்திற்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் பிப்.13ல் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பு மனுதாக்கல் செய்து இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செய்தியாளரை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் விஜயகாந்திற்கு விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.

English summary
Exemption for Vijayakanth from appearing in the court in journalist attack case in Chennai High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X