அக். 31ல் எல்லோரும் செல்போன் இன்டெர்நெட்டை துண்டித்து போராட பேஸ்புக்கில் தீயாய் பரவும் வேண்டுகோள்
சென்னை: அக்டோபர் 31ம்தேதி, செல்போன் இன்டெர்நெட் இணைப்பை நாட்டிலுள்ள அனைவரும் துண்டித்து, கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர். இப்போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டாவை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன.

ரூ.128 க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ.198ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட்வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளன.
நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று இவர்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையல்ல. நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 31ம்தேதி வெள்ளிக்கிழமையன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதிர்ப்பை வெளியிடுவோம்.
அக்டோபர் 31ம்தேதி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது, ஆகவே 31ம்தேதி யாரும் மொபைல் இணையத்தை உபயோகிக்க வேண்டாம்,
இந்தத் தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதில் வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications