என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் சரோஜா... வேலையை விடமாட்டேன் - அதிகாரி மீனாட்சி
அமைச்சர் சரோஜா தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரி மீனாட்சி புகார் கூறியுள்ளார்.
சென்னை: எந்த சூழ்நிலையிலும் வேலையை விட மாட்டேன் என்றும் அமைச்சர் சரோஜா தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள மீனாட்சி கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள அதிகாரி மீனாட்சி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்பட்டதால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியை பெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிகாரி மீனாட்சியை அந்தப் பணியை விட்டு செல்லுமாறு அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டியதாக மீனாட்சி நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலில் நன்னடத்தை அதிகாரி மூலம் தொந்தரவு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தன்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கே அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் மீனாட்சி நேற்று மாலை பரபரப்பு புகார் தெரிவித்தார்.

மிரட்டிய அமைச்சர்
இந்த நிலையில் அமைச்சர் சரோஜா மீது போலீசில் லஞ்ச புகார் அளித்த மீனாட்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் சரோஜா என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்கிவிட்டாய் என கூறினார்.

லஞ்சம் கேட்டார்
சரோஜா என்னிடம் ரூ.30 லட்சம் கேட்டார். பணம் தராவிட்டால் பணி நிரந்தரம் செய்ய மாட்டோம் எனவும் சரோஜா கூறினார். சரோஜாவுடன் அவரது கணவரும் எனக்கு மிரட்டல் விடுத்தார். பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் மீனாட்சி கூறினார்.

ஆதாரம் உள்ளது
சரோஜா எனது தந்தையிடம் ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன. தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் மீனாட்சி கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கமணியிடம் புகார்
தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கமணியிடம் எற்கனவே புகார் அளித்துள்ளேன். இன்று நேரடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அமைச்சர் மீது மட்டுமே புகார் அளித்ததாகவும், அரசுக்கு எதிராக புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications