தலைமைச் செயலக வளாகத்தில் பைக்கில் ஜாலியாக வலம் வந்த போலி இன்ஸ்பெக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுற்றித் திரிந்த போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்ஸ்பெக்டர் உடையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிவதாக கோட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்நபரின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்த வைகுண்டபதி சர்வோதய கிராமத்தை சேர்ந்தவர் டி.செல்லப்பாவின் மகன் தினேஷ் (30) எனத் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள தினேஷிடம் என்ன காரணத்திற்காக அவர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் தலைமைச் செயலகத்தில் சுற்றினார் எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி உயர் பாதுகாப்புப் பகுதியான தலைமைச் செயலகம் வளாகத்திலேயே தைரியமாக ஒரு நபர் போலீஸ் வேடத்தில் சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications