ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது.. ரஜினிக்கு பீட்டா கடிதம்
ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது என பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பின் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பல தலைவர்களும் பிரபலங்களும் ரஜினிக்கு பல்வேறு வகைகளில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீட்டா அமைப்பும் ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த கடிதத்தை அவசர கடிதம் என்று குறிப்பிட்டு பீட்டா அனுப்பி இருக்கிறது.
இதில் ரஜினி ரசிகர்கள் நடத்தும் விழாக்களில் ஆடு வெட்ட கூடாது என பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
வாழ்த்து
இதில் ரஜினியை பீட்டா வாழ்த்தி இருக்கிறது. ''உங்களுடைய அரசியல் அறிவிப்பிற்கு வாழ்த்துக்கள். சினிமாவின் வெற்றியை தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வந்து இருப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இருக்கும் புகழும் பலமும் மக்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறோம். '' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
விழா
ரஜினி ரசிகர்கள் வரும் 7ம் தேதி அழகர்கோவிலில் ரஜினி அரசியல் அறிவிப்பை விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். இதில் ஆடு வெட்டி சாப்பாடு சமைக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் ஆடு வெட்டி கொண்டாட கூடாது என பீட்டா கோரிக்கை வைத்து இருக்கிறது. இதை அவசர விஷயம் என்றும் பீட்டா குறிப்பிட்டு உள்ளது.
சட்டம்
கோவிலில் ஆடு வெட்டி கொண்டாடுவது சட்டத்திற்கு விரோதமானது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. 2001ல் அரசு வெளியிட்ட ஆணையின்படி இது முழுக்க முழுக்க சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது. எனவே இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை வைத்து இருக்கிறது.
மீண்டும்
ஏற்கனவே ரஜினி தன் ரசிகர்களை சந்தித்த போது இந்த பிரச்சனை எழுந்தது. அப்போது ரஜினியிடம் அவரது ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைக்க சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினி ''உங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைதான். ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் அசைவத்திற்கு அனுமதி இல்லை'' என்று கூறினார்.