பாலாற்று தடுப்பணையில் தமிழக விவசாயி தற்கொலை... ஆந்திரா ரூ.50 லட்சம் வழங்க வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: ஆந்திரா அரசின் அடாவடியால் தமிழக விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்திருக்கிறார். விவசாயி சீனிவாசன் குடும்பத்துக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

புல்லூர் தடுப்பணையின் உயரத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து என் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தான் முதன் முதலாக போராட்டத்தை நடத்தினோம். ஆனாலும் ஆந்திரா அரசு தமிழகத்தின் எதிர்ப்பை மீறி தடுப்பணையின் உயரத்தை அதிகரித்துள்ளது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த நடவடிக்கையுடன் நின்றுவிடாமல் ஆந்திரா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை கைவிடச் செய்திருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் தற்போது பள்ளத்தூர் சீனிவாசன் தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து விட்டார்களே என்ற வேதனையில் அதே தடுப்பணையில் குதித்து தமது உயிரை மாய்த்திருக்கமாட்டார்.
அதுவும் பாலாற்றில் 12 அடி வரை நீர் நிரம்பியிருந்தும் இந்த தடுப்பணை உயர்த்தப்பட்டு விட்டதால் விவசாயத்துக்கு நீர் இல்லாமல் போகிறதே என்ற வேதனையுடன் மேற்கு பக்கமாக திரும்பி சூரியன் மறைவதைப் பார்த்து இரு கை கூப்பி வணங்கியபடி தடுப்பணையில் குதித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இது விவசாயி சீனிவாசனின் துயரம் அல்ல.. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேதனையின் வெளிப்பாடுதான் சீனிவாசனின் உயிர் தற்கொடையாகும்.
இப்படியான ஒருநிலைக்கு தமிழக விவசாயிகளை தள்ளிய ஆந்திரா அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து சிறிதுகூட கவலைப்படாமல் மத்திய அரசும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆந்திரா அரசு உடனே புல்லூர் தடுப்பணையின் உயரத்தை 5 அடியாக குறைப்பதுதான் சீனிவாசனின் உயிர்கொடைக்கான உரிய மரியாதையாகும். இல்லையெனில் தமிழக விவசாயிகளே அந்த தடுப்பணையை தகர்க்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.
தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications