அதிமுக எம்.எல்.ஏ கார் மோதி விவசாயி பலி - திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்,பெரியகுளம் அருகே அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதி விவசாயி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் அரங்கசாமி. விவசாயியான இவர் நேற்று மாலை 3.30 மணியளவில், பெரியகுளம் பிரிவு அருகே மொபட்டில் சென்றார்.
அப்போது, தளியில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற மடத்துக்குளம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகவேலு பயணம் செய்த கார் அரங்கசாமி சென்ற மொபட் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்து சாலையில் உயிருக்குப் போராடிய முதியவரை எம்.எல்.ஏவும், உடன் வந்தவர்களும் மீட்டு உடுமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரங்கசமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.