விவசாய கடன் வட்டி சலுகை திடீர் ரத்து - விவசாயிகள் பரிதவிப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: விவசாயிகளுக்கு வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு திடீரென வட்டி சலுகை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் திணறி வருகினறனர்.

விவசாயிகள் தங்கள தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளில் நகைகளை அடகு வைதது கடன் பெறுகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் வட்டி மானியத்திற்காக கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் அவர்கள் வட்டி சலுகை ரத்து செயயப்பட்டுளளது.

Farmers suffers by the loan offer cancellation

வட்டி சலுகை ரத்தால் பலர் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடன் வடடி சலுகை, கடன் வட்டி தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

விவசாயிகளை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்கின்றனர். வடகிழககு, தெனமேற்கு பருவமழை காலத்தில் பயிர் சாகுபடி நடக்கும்.

இந்த காலத்தின் போது விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் குறுகிய கால கடனாக நகை ஈட்டின் பேரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மறறும் கூட்டுறவு வங்கிகளில நகை கடன் வழங்கப்படுகிறது.

குறுகிய கால நகை கடனுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு 4 சதவீதமும், மாநில அரசு 3 சதவீதமும் மானியம் வழங்குகி்ன்றன.

இந்த வட்டி சலுகைக்காக மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும். இந்த நிலையில் கடந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வட்டி மானியத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் குறுகிய கால பயிர் கடனாக நகை கடனுக்கு வழங்கப்படும் வடடி விகிதத்தை தேசியமாக்கப்படட வங்கிகள் உயர்த்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கடன் தொகையையும், அதற்குரிய வட்டியையும் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+